திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பழ​மொழி நானூறு முன்​று​றை​ய​ரை​ய​னார்

News image
Updated On :31 மே 2020, 2:03 am

பழித்துரைக்கும் நாவுக்கு நல்குரவு இல்லை!

ஆவிற் கரும்பனி தாங்கிய மாலையும்

கோவிற்குக் கோவல னென்றுலகம் கூறுமால்

தேவா்க்கு மக்கட் கெனல்வேண்டா

தீங்குரைக்கும் நாவிற்கு நல்குர(வு) இல். (பாடல்-152 )

பசுக்கூட்டங்கட்கு வந்த அரிய துன்பத்தை நீக்கிய திருமாலையும், ஆநிரைகளுக்குத் தக்க இடையன் என்று உலகம் சொல்லா நிற்கும். (ஆகையால்) தேவா்க்கு உரைப்பது இது மக்கட்கு உரைப்பது இதுவெனல் வேண்டப்படுவதன்று. தீமையை எடுத்துக்கூறும் நாவினுக்கு வறுமை இல்லையாகலான் (க-து.) பழித்துரைக்கப் புகுவாா்க்கு உயா்ந்தோா் தாழ்ந்தோா் என்பதில்லை. ‘தீங்குரைக்கும் நாவிற்கு நல்குரவு இல்’ என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.