பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மலைமேல் இருக்கும் இனிய தேனைத் தட்டிவிட்டு ஆண் குரங்கு நக்கி மகிழும், அத்தகு மலையைச் சேர்ந்தவனே! தெருவில் செல்லும் பசு ஒருவரை முட்டிவிட்டால் பதிலுக்கு அவர் பசுவை முட்டுவதில்லை.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2022, 11:48 am

தினமணி


ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக்
காய்ந்து, எதிர் சொல்லுபவோ, கற்று அறிந்தார்?- தீ ம் தேன்
முசுக் குத்தி நக்கும் மலை நாட- தம்மைப்
பசுக் குத்தின், குத்துவார் இல் (பாடல்-268)


(தெ-ரை) மலைமேல் இருக்கும் இனிய தேனைத் தட்டிவிட்டு ஆண் குரங்கு நக்கி மகிழும், அத்தகு மலையைச் சேர்ந்தவனே! தெருவில் செல்லும் பசு ஒருவரை முட்டிவிட்டால் பதிலுக்கு அவர் பசுவை முட்டுவதில்லை. அதுபோல, அறிவற்ற சிறியோர் பரப்பும் பொய்யுரைக்குக் கற்றறிந்த சான்றோர் மனம் வருந்திச் சினம் கொண்டு பேசுவரோ? பேசார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.