இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

பிறவா ஆம்பல்

சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் திருத்தலம் திருவலஞ்சுழி. இத்தல விநாயகர் வெள்ளை (சுவேத) விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

News image
Updated On :26 ஜூன் 2022, 5:09 pm IST


சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் திருத்தலம் திருவலஞ்சுழி. இத்தல விநாயகர் வெள்ளை (சுவேத) விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள விநாயகருக்குத் துதிக்கை வலப்பக்கம் சுழித்துள்ளதால் "வலஞ்சுழி விநாயகர்' எனப்படுகிறார். அதனால் இத்திருத்தலம், "திருவலஞ்சுழி' எனப் பெயர் பெற்றது. இத்திருத்தலத்துக்கு ஒரு முறை காளமேகப் புலவர் சென்றிருக்கிறார். அங்கு வீற்றிருக்கும் விநாயகப் பெருமான் குறித்துப் பாடிய சுவையான பாடல் இது.

 "பறவாத தும்பி கருகாத வெங்கரி பண்புரண்டே
இறுகாத தந்தி உருகாத மாதங்க மிந்து நுதல்
நிறவாத சிந்துரம் பூசாக் களபம் நெடுஞ்சுனையில்
பிறவாத வாம்பல் வலஞ்சுழிக் கேவரப் பெற்றனனே' 
(தனிப்பாடல்) 

தும்பி, கரி, தந்தி, மாதங்கம், சிந்துரம், இந்து, களபம், ஆம்பல் என்பனவெல்லாம் வெவ்வேறு பொருளைக் குறிப்பன. மேலும் அவை யானையின் பெயரும் ஆகும். அதனால் அவற்றைக் குறிப்பிடுவதுபோல யானைமுகனைக் குறிப்பிட்டுப் போற்றுகின்றார் காளமேகம். 

"பறந்தலைச் செய்யாத தும்பி (வண்டு), கருகிப் போகாத வெம்மையான கரி (அடுப்புக்கரி), பண்முறை பிறழ்ந்து கட்டமையாத தந்தி (வீணையின் தந்தி), அளவிடத்தே உருகாத மாதங்கம் (பெரிய தங்கக்கட்டி), பிறை போன்ற நெற்றியிடத்தே நிறம் காட்டாத சிந்துரம் (பொட்டு), பூசுதற்குப் பயன்படாத களபம் (களபம் சாந்து), நெடிய சுனை நீரினிடத்தே தோன்றாத ஆம்பல் (ஆம்பற்பூ) ஆகிய விநாயகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவலஞ்சுழியினிடத்தே வந்து அவன் அருளை பெற்றேன் யான்' என்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.