பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

சூதாடும் களத்தில் திறமை வாய்ந்த சூதாடிக்கு,  சூதாட்டத்தின் நுணுக்கங்களைச் சொல்லிதர அவன் அருகிலேயே இருந்து  ஒருவன் அவனை ஆதரித்துக் கொண்டிருப்பான்.
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

ஒக்கும் வகையான் உடன்பொரும் சூதின்கண்
பக்கத் தொருவன் ஒருவன்பாற் பட்டிருக்கும் 
மிக்க சிறப்பின ராயினும் தாயர்க்கு 
மக்களுள் பக்கமோ வேறு. (பாடல்}260)

சூதாடும் களத்தில் திறமை வாய்ந்த சூதாடிக்கு,  சூதாட்டத்தின் நுணுக்கங்களைச் சொல்லிதர அவன் அருகிலேயே இருந்து  ஒருவன் அவனை ஆதரித்துக் கொண்டிருப்பான். அதுவே உலக இயல்பு. அதுபோலவே, பிள்ளைகள் மிகுந்த சிறப்புடையவர்களாயினும் தாய்மார்க்கு அவர்கள்பால் விளங்கும் பாசம் வேறு வகையினதாகவே இருக்கும். "தாயர்க்கு மக்களுள் பக்கமோ வேறு' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com