மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எம்பியை ஈங்குப் பெற்றேன்!

உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.

News image
கோப்புப் படம்
Updated On :4 ஜனவரி 2026, 1:52 pm

தினமணி செய்திச் சேவை

முனைவர் ப.ஜீவகன்

உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம். அறம் பாடும் காப்பியமான கம்ப ராமாயணத்தில் கம்பனோ, ராமனுக்கு வரமாக வாய்த்த அனைத்து சகோதரர்களுமே அவனையே உயிராக நினைத்து வாழ்ந்தனர். அவன் நலமே தன் நலமாகப் போற்றினர். போரில் இளையபெருமாள் இந்திரஜித்தை வென்றான்.

அதனைக் கண்டபின் ராமன் அவனை நோக்கி. ' இலக்குமனா நீ இந்திரஜித் வென்றதால் இனி இராவணனும் கொல்லப்படுவான், இனி சனகன் பெற்றெடுத்த சீதையும் என்னிடம் வந்து சேர்வாள் என்பதால் மனம் குளிர்ந்தேன். தம்பியுடையான் பகைக்கு அஞ்சான் எனும் பழமொழியை உன் செயலால் நிலை நிறுத்தினாய்' என்று இராமன் கூற்றாக

கம்ப மதத்துக் களியானைக் காவற் சனகன்

பெற்றெடுத்த

கொம்பு மென்பா லினவந்து குறுகி னாளென் ற

கங்குளிர்ந்தேன்

வம்பு செறிந்த மலர்கோயின் மறையோன்

படைத்த மாநிலத்தில்

தம்பி யுடையான் பகையஞ்சான் என்னு மாற்றந்

தந்தனையால்

(கம்பராமாயணம் இந்தரசித்து வதை

படலம்- 69)

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் சீவகனின் வளர்ப்பு பெற்றோரான கந்துக்கடன் - சுநந்தைக்கும் தலைமாகவாகப் பிறந்தவன் நந்தட்டன். பின்னர் அவர்களுக்கு பிறந்தவர் நபுலன் விபுலன் என ஆக மூவரும் சீவகனின் உயிர் அணைய உடன்பிறப்புகளாக அவனின் நண்பர்களுடன் காப்பியம் முழுமையும் வருகின்றனர்.

சீவகனைப் பிரிந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு நந்தட்டன் சீவகனைக் கண்டு அன்பு பொங்க கண்ணீருடன் அவனை ஆழத்தழுவுபோது, 'இவ்வுலகில் நாம் விரும்பும் செல்வத்தை தேடிக் கொள்ள முடியும் ; பகைவரையும் வெல்ல முடியும் ; நட்பையும் மனைவியையும் மக்களையும் மற்ற பொருள்களையும் அடைய முடியும்.

ஆனால் நம்மால் உண்டாக்கிக் கொள்ள முடியாத சிறந்த பொருள் உடன்பிறப்புதான். எனவே, அப்படிப்பட்ட உன்னை எங்கு மீண்டும் பெற்றேன்' என்று மனமகிழ்கிறான்.

இதனை

திண்பொருள் எய்த லாகும் தெவ்வரைச்

செகுக்க லாகும்

நண்பொடு பெண்டீர் மக்கள் யாவையும்

நண்ண லாகும்

ஒண்பொரு ளாவதையா உடன்பிறப் பாக்க லாகா

எம்பியை ஈங்குப் பெற்றேன் என்னெனக்

கரிய தென்றான்

(சீவக. 1760)

உடன்பிறப்பின் சிறப்பினை 'தம்பியுடையான் பகையஞ்சான்' எனும் கம்ப ராமாயணம் பாடல் தொடராலும், 'எம்பியை ஈங்கு பெற்றேன் எனக் கரியதென்றான்' என்ற சிந்தாமணி தொடராலும், ஒப்பு நோக்கி அறிய முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.