தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

உண்மைத் துறவியின் இலக்கணம்

ஒரு கேடுஞ் செய்யாத தம்மை, அறிவற்ற பேதை மாக்கள் இகழ்ந்தால், அதைத் தாம் பொறுத்துக் கொள்வதும் அல்லாமல், எம்மை இப்படி இகழ்ந்து பேசிய தீவினையின் பயனால், இவர்கள் மறுமையில் தீ நிரம்பிய நரகத்திலே வீழ்வார்களே?

News image
Updated On :47 நிமிடங்கள் முன்பு

தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி, மற்று

எம்மை இகழ்ந்த வினைப்பயத்தான், - உம்மை

எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்!' என்று

பரிவதூஉம், சான்றோர் கடன்.

(பாடல் 58 அதிகாரம்: துறவு)

ஒரு கேடுஞ் செய்யாத தம்மை, அறிவற்ற பேதை மாக்கள் இகழ்ந்தால், அதைத் தாம் பொறுத்துக் கொள்வதும் அல்லாமல், எம்மை இப்படி இகழ்ந்து பேசிய தீவினையின் பயனால், இவர்கள் மறுமையில் தீ நிரம்பிய நரகத்திலே வீழ்வார்களே?' என்று, அவர்களுக்காக இரக்கப்படுவதும், துறவினால் சான்றாண்மை உடையவராக விளங்குபவரின் கடமையாகும்.

தமக்கு துன்பம் இழைத்தவருக்கும், அதனால் துன்பம் நேரிடக்கூடாது என்று எண்ணுகின்ற இரக்கம் உடைமையே உண்மைத் துறவியரின் இலக்கணம்' என்பது கருத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.