ராபர்ட் கிளைவ் காணிக்கை

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழாவிற்கு பெயர் பெற்றது காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில்.
ராபர்ட் கிளைவ் காணிக்கை
Updated on
1 min read

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழாவிற்கு பெயர் பெற்றது காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்விழாவின் போது நடைபெறும் தேரோட்டமும், கருட சேவைக் காட்சியும் மிகவும் பிரசித்தி பெற்றவை.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கருடசேவை உற்சவத்தை ஒருமுறை பார்க்க வந்திருந்த சென்னையின் மேஜர் ஜெனரலாக இருந்த ராபர்ட் கிளைவ் வியந்து போய் மகிழ்ச்சிப் பெருக்கால் தனது மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த மணிமாலையை எடுத்து பெருமாளுக்கு காணிக்கையாகக் கொடுத்தாராம். இத்திருவாபரணம் இன்றும் "கிளைவ் மகரஹண்டி' என்ற பெயரோடு கருட சேவை வைபவத்தின்போது மட்டும் பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com