பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நாகமான் - எலீசா

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:36 pm IST

சிரியா நாட்டில் நாகமான் என்றொரு படைத்தலைவன் மிகுந்த செல்வக்குடையவனாக இருந்தான். இறைவன் அவன் வழியாக சிரியா நாட்டிற்கு பல வெற்றிகளைக் கொடுத்திருந்தார். ஆனால் இந்த நாகமான் ஒரு தொழுநோயாளி. நாகமான் வீட்டில் இஸ்ரவேல் நாட்டின் சிறு பெண் அவன் மனைவிக்குப் பணிப்பெண்ணாக பணிவிடை செய்து வந்தாள். அவள் தன் எஜமானியிடம் நாகமானை சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் எலிசாவிடம் அனுப்பிவைத்தால் குணமடைவார் என்று தெரிவித்தாள். அவளும் தன் கணவன் நாகமானிடம் தெரிவிக்க, அவரும் ஒப்புக்கொண்டு சிரியா அரசனிடம் இஸ்ரவேல் அரசனுக்கு கடிதம் பெற்றுக்கொண்டு, வெள்ளி, பொன், விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை எடுத்துக்கொண்டு இஸ்ரவேல் அரண்மனையை அடைந்தான்.
இஸ்ரவேல் ராஜாவோ தொழு நோயைக் குணப்படுத்த நான் என்ன கடவுளா? என்று கேட்டு சினமடைந்தான். அப்பொழுது எலிசா நாகமானை தன்னிடம் அனுப்பும்படி வேண்டினான். அப்படியே நாகமான் தன் பரிவாரங்களுடன் எல்லா பொருள்களுடனே எலிசா வீட்டின் முன் வந்து நின்றான். அப்பொழுது எலிசா தன் பணியாளனை அனுப்பி, நாகமானை யோர்தான் நதியில் ஏழுதரம் மூழ்கி குளித்தெழுந்தால் தொழுநோய் நீங்கி சுத்தமாகும் என்று சொல்லச் சொன்னான்.(2 ராஜா.5:10) 
அதற்கு நாகமான் கடுஞ்சினம் கொண்டு சிரியாவில் தண்ணீர் இல்லாமலா இங்கு வந்தேன் என்று சொல்லி மிகுந்த கோபத்துடன் திரும்பிப்போனான். நாகமானின் ஊழியக்காரன் ஒருவன் அருகில் வந்து, எலிசா கடினமான பெரிய காரியங்களைச் செய்யச் சொல்லியிருந்தால் நீரும் சிரமேற்கொண்டு செய்திருப்பீர் அல்லவா? (ராஜா.5:13) இந்த அற்ப காரியத்தைச் செய்வதில் தடையென்ன? என்று வினவியதும் தன் தவறை உணர்ந்து நாகமான் யோர்தான் நதியில் ஏழுதரம் மூழ்கி எழுந்தபோது அவன் உடல் முழுவதும் தொழுநோய் நீங்கி, சிறு பிள்ளையின் உடலைப் போல மாறியதைக் கண்டு "இதோ இஸ்ரவேலில் இருக்கிற தேவனைத் தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்"என்று கூறி(2ராஜா.5:15)
இறைவனைப் புகழ்ந்து போற்றியபடி தன் நாடு திரும்பினான்.
நாகமான் எதிர்பார்த்து வந்தது இறைவாக்கினன் எலிசா தன் உடல் முழுவதும் கைகளினால் ஏதேனும் எண்ணெய்யைப் பூசி, இறைவனிடம் மன்றாடி பல மணிநேரம் போராடிய பின்னரே தனக்கு சுகம் கிடைக்கும் என்று எண்ணினார். ஆனால் இறைவனோ இறைவாக்கினர் வழியாக அன்றாடம் செய்யக்கூடிய, நீரில் குளித்து முழ்கி எழுந்தாலே போதும் என்ற அற்ப காரியத்தைக் கூறக்கேட்டதும் மனம் ஏற்க மறுக்கிறது. நாமும் கூட இவ்வாறே கடின செயல்களான நடைப்பயணமோ, உடலை வருத்திக்கொள்வதோ, ஓத்தல் முயற்சிகள் மேற்கொண்டுவிட்டாலோ இறைவனிடமிருந்து அற்புதங்களைப் பெற்றுவிடலாம் என்று எண்ணுகிறோம். 
ஆனால் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது ஆழ்ந்த இறைநம்பிக்கையும், சிறிய காரியங்களிலும்கூட கீழ்ப்படிய வேண்டும் என்பதே. ஏனெனில் அற்பகாரியங்களிலும்கூட அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்வது இறைவனுக்கு மிகமிக எளிது. இறைவனை நம்புவோம். கீழ்ப்படிவோம். நோயற்ற சுகவாழ்வு வாழ்வோம்.! 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.