இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
புதிய முயற்சிகளைச் சிந்திப்பீர்கள். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். விளையாட்டு, உடற்பயிற்சி, யோகா போன்றவைகளில் ஈடுபடுத்திக்கொள்வீர்கள்.
உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் தேவையற்ற கருத்துகளை பரிமாறாதீர்கள். புதிய முயற்சிகளில் கவனத்துடன் செயல்படவும். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளினால் மனதில் ஒரு குழப்பம் ஏற்படும். எவரையும் நம்பி கடனில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள். விவசாயிகளுக்கு உடலாரோக்கியம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். நீர்வரத்து அதிகரித்து மகசூல்களில் லாபத்தை அள்ளுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு நண்பர்களின் சந்திப்பு மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். கடன் சார்ந்த பிரச்னைகள் குறையும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்
கள் கையெப்பமாகும். பெண்மணிகளுக்கு தந்தை வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மாணவ மணிகள் கல்வியில் மேற்படிப்பைத் தொடர எதிர்பார்த்த உதவியை உற்றார், உறவினர்களிடமிருந்து கிடைக்கப் பெறுவீர்கள்.
பரிகாரம்: விநாயகப் பெருமானையும், ஸ்ரீநரசிம்ம மூர்த்தியையும் வணங்குங்கள், அனுகூலமான தினங்கள்: 29, 30 சந்திராஷ்டமம்: இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவதன் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளில் மரியாதை அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் அனுபவம் உண்டாகும். பதவி உயர்வு, உத்யோகத்தில் மாற்றம் ஏற்படும். வியாபாரிகள் மற்றவர்களை நம்பி எந்தக் காரியங்களிலும் ஈடுபடாதீர்கள். விவசாயிகள் புதிய செயல்களை மேற்கொள்ளும் பொழுது சிந்தித்து செயல்படுதல் அவசியம். விவசாயப் பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு முயற்சிக்கு ஏற்ப பாராட்டும், ஒத்துழைப்பும் உண்டாகும். சக தொண்டர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களுடன் நெருக்கம் காட்டுவீர்கள். வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகள் ஒப்பந்தமாகி, எதிர்பார்த்த வரவு வரும். பெண்மணிகளுக்கு கணவன் - மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாணவமணிகள் அனைவரின் பாராட்டுகளையும் ஆதரவுகளையும் பெறுவீர்கள்.
பரிகாரம்: அம்பாளை வணங்குங்கள் . அனுகூலமான தினங்கள்: 30, 01 சந்திராஷ்டமம்: இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
சமூகத்தில் பெரியோர்களின் அறிமுகம் கிடைக்கும். உடலாரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். அரசு தொடர்பான பணிகளில் இருந்து வந்த காலதாமதம் நீங்கும். ஆடம்பரப் பொருள்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும்.
உத்யோகஸ்தர்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி தரும் விஷயங்கள் காதுக்கு எட்டும். திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் ஈடேறும். வியாபாரிகள் தொழில் சார்ந்த புதிய இலக்குகளை தீர்மானிப்பீர்கள். பூர்வீக சொத்துகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். விவசாயிகள் அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். தடைபட்ட பணிகளைசெய்து முடிப்பீர்கள். கலைத்துறையினரின் பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் சக கலைஞர்கள் மூலம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்மணிகள் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்லவும். மாணவமணிகளுக்கு புது நண்பர்களின் நட்பால் நல்ல மாற்றம் ஏற்படும். கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும்.
பரிகாரம்: தில்லை நடராஜரை வணங்கவும். அனுகூலமான தினங்கள்: 29, 01. சந்திராஷ்டமம்: இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் பிரச்னைகள் விலகி மனமகிழ்ச்சி கொள்வீர்கள். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த வில்லங்கங்கள் விலகும். ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.
உத்யோகஸ்தர்கள் உத்யோக ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதுப்புது யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தில் வெற்றிக்கு வித்திடுவீர்கள். விவசாயிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். புதிய உபகரணங்களைக் கையாளும் பொழுது மிகுந்த கவனம் தேவை.
அரசியல்வாதிகள் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். இழுபறியான பணிகள் முடிவதற்கான சூழல் அமையும். கலைத்துறையினருக்கு நல்ல வருவாய் ஏற்படும். தற்பெருமையை குறைத்துக் கொண்டு சக கலைஞர்களுக்கு ஒத்துழைப்பைக் கொடுக்கவும். பெண்மணிகள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். தாய்மாமன் வகையில் ஒத்துழைப்பு மேலோங்கும். மாணவமணிகள் கடுமையான உழைப்பினால் போட்டித் தேர்வுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: சாஸ்தாவை வணங்குங்கள். அனுகூலமான தினங்கள்: 30, 02 சந்திராஷ்டமம்: இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். உடன்பிறப்புகளால் அனுகூலமடைவீர்கள். குழந்தைகளின் வழியில் விரயங்கள் உண்டாகும். உடலாரோக்கியம் மேம்படும்.
உத்யோகஸ்தர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பணியில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளியூரிலும் வியாபாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பயணிப்பீர்கள். விவசாயிகளு க்கு விவசாயப் பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். விலை நிர்ணயம் செய்வதில் குழப்பம் உண்டாகி பின் சரியாகிவிடும்.
அரசியல்வாதிகளுக்கு புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். கலைத்துறையினருக்கு லாபகரமான வாய்ப்புகள் அமையும். பாராட்டுகள் குவியும். பெண்மணிகள் தடைபட்ட தன வரவு கிடைக்கப் பெறுவார்கள். மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் வெளிநாடு செல்லும் முயற்சியில் சற்று அனுகூலமான சூழ்நிலையை எதிர்கொள்வீர்கள். நண்பர்களுடன் ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபடுங்கள்.
பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை பூசிக்கவும். அனுகூலமான தினங்கள்: 30, 03 சந்திராஷ்டமம்: 29.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
மனதில் மகிழ்ச்சியான சிந்தனைகளும், சூழ்நிலைகளும் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் குறையும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து நடக்கவும். கருத்து வேறுபாடுகள் மறைந்து நட்பு பாராட்டுங்கள். வியாபாரிகளுக்கு எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்களும், அனுபவமும் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். விவசாயிகளுக்கு கால்நடைகள் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உறவினர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அரசியல்வாதிகளுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கலைத்துறையினருக்கு பொருளாதார நிலைமை மேம்படும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெண்மணிகள் மனதில் புதுவிதமான சிந்தனை உண்டாகும். பூர்வீக சொத்துகளை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவ மணிகளுக்கு கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மிகவும் சாதகமாகும். மனதில் இனம் புரியாத சிந்தனைகளினால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் வணங்கி வரவும். அனுகூலமான தினங்கள்: 29, 03. சந்திராஷ்டமம்: 30, 01.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
பூர்வீக சொத்துகள் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். குழந்தைகளினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் கைகூடும். எதிலும் நிதானத்துடன் ஈடுபடவும்.
உத்யோகஸ்தர்களுக்கு பொருளாதாரம் தொடர்பான இன்னல்கள் குறையும். திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். விழிப்புணர்வுடன் இருந்தால் இன்னல்கள் குறையும். விவசாயிகள் ஆரோக்யம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தேவைக்கு கடன் வாங்கி விவசாயத்தை மேம்படுத்துவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு புதிய நபர்களின் அறிமுகத்தால் மனதளவில் மாற்றம் ஏற்படும். கலைத்துறையினருக்கு தனவரவு எதிர்பார்த்த அளவில் இருந்தாலும், அதற்கேற்ற செலவும் ஏற்படும். உடல்நிலையில் கவனம் தேவை. பெண்மணிகளுக்கு உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் தோற்றப் பொலிவு மற்ற எண்ணங்கள் மேம்படும். மாணவமணிகளுக்கு எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பே நிறைவேறும். மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
பரிகாரம்: மதுரை மீனாட்சியின் தரிசனம் உகந்தது. அனுகூலமான தினங்கள்: 01, 05. சந்திராஷ்டமம்: 02, 03, 04
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
முக்கியமான பணியினைச் செய்து முடிக்க ஓய்வின்றி பாடுபட்டு உழைப்பீர்கள். பணவரவு பாதிக்கப்பட்டாலும் திருப்பம் ஏற்பட்டு வளமாகும். பொருளாதாரம் சமமாகவே இருக்கும். சில புதிய திருப்பங்கள் ஏற்படலாம்.
உத்யோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மேலதிகாரிகளின் ஆதரவு பெருகும்.வியாபாரிகள் நம்பிக்கையான ஊழியர்களை மதித்து வேலை வாங்குங்கள். எதிலும் அகலக்கால் வைக்காதீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் லாபங்களை அடைவீர்கள். வயல் வரப்பு பிரச்னைகளில் முடிவுகள் உங்களுக்கு சாதகமாகும்.
அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களில் வெற்றி நடைபோடுவீர்கள். தொண்டர்களால் மிகுந்த உதவி பெறுவீர்கள். கலைத்துறையினர் புதுப்புது ஓப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்மணிகள் செலவைக் குறைத்து சேமிப்பைக் கூட்டுங்கள். உறவினர்களிடம் அனுகூலமாக இருந்து அன்பை பொழியுங்கள். குழந்தைகளைக் கருத்தாய் கவனித்துக் கொள்ளுங்கள். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்துவீர்கள்.
பரிகாரம்: சுப்ரமண்யரை வணங்கி கந்த சஷ்டி பாராயணம் செய்யவும். அனுகூலமான தினங்கள்: 20, 04 சந்திராஷ்டமம்: 05
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
சிறுதொழில் புரிபவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நீண்ட நாள்களாக இருந்து வந்த பழைய பாக்கிகள் வசூலாகும்.
உத்யோகஸ்தர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.உத்யோக மாற்றம், வெளிநாடு செல்லும் சூழ்நிலை தென்படும். வியாபாரிகளுக்கு இழுபறியாக இருந்து வந்த வழக்கு தொடர்பான காரியங்களில் தற்போது தீர்வு கிடைக்கும். விவசாயிகள் அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த சில உதவி சாதகமாக அமையும். தொழில் சார்ந்த கருவிகளால் லாபம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் மாற்றங்களை முன்வைப்பீர்கள். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். கலைத் துறையினர் மனக்குழப்பம் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் அதிகரிக்கும். பெண்மணிகளுக்கு உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது உத்தமமாகும். மாணவமணிகளுக்கு ஆசிரியரிடமிருந்து எதிர்பார்த்த உதவி காலதாமதமாகவே கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் திறம்பட மேற்கொள்வீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீ அனுமனை வணங்குங்கள். அனுகூலமான தினங்கள் : 03, 05. சந்திராஷ்டமம் : இல்லை
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது உத்தமமாகும். தொழில் நிமித்தமான ரகசியங்களை, மற்றவர்களிடம் கூறுவதை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகளில் ஆரவாரம் இன்றி செயல்படுவீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும் . சக ஊழியர்கள் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரிகள் கூட்டாளிகளின் உதவியால் இழுபறியான செயல்களைக் செய்து முடிப்பீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். விவசாயிகள் சிலருக்கு திடீர் தனவரவு கிடைக்கும். கால்நடைகளினாலும் நல்ல லாபம் ஈட்டுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு எண்ணங்களில் புதுவிதமான மாற்றம் ஏற்படும். முயற்சிக்கேற்ப அங்கீகாரம் கால தாமதமாக கிடைக்கும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடையே நல்லிணக்கம் ஏற்படும். ஆதரவான சூழல்களால் மனமகிழ்ச்சி உண்டாகும். பெண்மணிகள் உடன்பிறப்புகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும். உங்கள் எண்ணங்களில் நல்லதொரு மாற்றத்தை உணர்வீர்கள். மனை சம்பந்தமான சுப விரயங்கள் உண்டாகும். மாணவமணிகளின் குணநலன்களில் சில மாற்றம் ஏற்படும். பேச்சில் நிதானமும், பொறுமையும் தேவை.
பரிகாரம் : ஸ்ரீ ஹயக்கீரிவரை வணங்குங்கள். அனுகூலமான தினங்கள்: 02, 04. சந்திராஷ்டமம் : இல்லை
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரித்தாலும், பொருளாதார மந்த நிலைமையினால் சற்று தாமதமாகும். பூர்வீக சொத்துகள் சம்பந்தமாக செய்யும் சில முயற்சிககளில் மந்தத்தன்மை உண்டாகும்.
உத்யோகஸ்தர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் சாதகமான சூழல் உண்டாகும். எடுத்த வேலைகளை முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரிகள் உடலாரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். விவசாயிகளுக்கு தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பயணங்களினால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கட்சி உட்பூசல்களினால் சில பிரச்னைகளைக் சந்திப்பீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உற்சாகத்துடன் உங்கள் நிகழ்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். பெண்மணிகளுக்கு மனதில் இனம் புரியாத பயம் கவலைகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மாணவமணிகள் கல்வியில் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். பொறுமையைக் கையாளுங்கள்.
பரிகாரம் : ராகு கால துர்க்கையை விளக்கேற்றி வணங்குங்கள். அனுகூலமான தினங்கள்: 29, 05. சந்திராஷ்டமம் : இல்லை
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மனத் தைரியத்துடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சொத்துகள் சம்பந்தமான வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய தொழில்நுட்பம் பற்றிய சிந்தனைகள் மேம்படும்.
உத்யோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும் அலைச்சல், வேலை அதிகமாவதால் உடலில் அசதியை ஏற்படுத்தும். வியாபாரிகளுக்கு லாபம் ஏற்றமும் இறக்கமும் ஆக காணப்படும். புதிய முயற்சிகளில் அளவோடு முதலீடு செய்யுங்கள். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். விளைச்சலுக்கு சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். ஏற்றுமதியும் அதிகரித்து லாபம் மேம்படும்.
அரசியல்வாதிகள் சில பிரச்னைகளில் மாட்டிக் கொள்ள நேரிடும். ஆதலால் தேவையற்ற சமூக பிரச்னைகளைத் தவிர்த்திடுங்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செலவினங்களும் கூடும். பெண்மணிகள் திருமணமாகதவர்களுக்கு விரைவில் கெட்டிமேள சத்தம் இல்லத்தில் ஒலிக்கும். விருந்தினர்களின் வருகை மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாணவமணிகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வெளிநாடு சென்று உயர் கல்வி கற்க எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் உதவி கிடைக்கும்.
பரிகாரம்: துர்க்கை, சனீ பகவானை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 04, 05 சந்திராஷ்டமம்: இல்லை