/

சமரசத் திட்டம்: அமெரிக்காவிடம் ரஷியா ஒப்படைப்பு

சிரியாவிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை சர்வதேசக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான சமரசத் திட்டத்தை ரஷிய அதிகாரிகள், அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளனர்.

Updated On :12 செப்டம்பர் 2013, 2:43 am IST

சிரியாவிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை சர்வதேசக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான சமரசத் திட்டத்தை ரஷிய அதிகாரிகள், அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிரியா விவகாரம் தொடர்பாக ஜெனீவாவில் ரஷியா மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் வியாழக்கிழமை தொடங்க உள்ளது.

இந்நிலையில், சிரியாவிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை சர்வதேசக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான திட்டத்தை ரஷிய அதிகாரிகள், அமெரிக்க அதிகாரிகளிடம் புதன்கிழமை ஒப்படைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டம் குறித்து இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் விவாதிக்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.