மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 பதிவான போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Updated On :8 நவம்பர் 2015, 2:36 pm

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 பதிவான போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

சுமத்ரா தீவின் சிபோலா நகரிலிருந்து தெற்கே 111 கிமீ தொலைவில் கடலுக்கு அடியில் 75 கிமீ ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மண்டலிங் மாவட்டத்தில் இந்த நில அதிர்வு 15 விநாடிகள் உணரப்பட்டதாக கூறிய இந்தோனேசிய வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி நிறுவன அலுவலர் முகமது ரியாதி, இதனால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றார். மேலும், சுனாமி குறித்த எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.