ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

டிரம்பின் தொடர் அதிரடி நடவடிக்கையால் பெண் அட்டார்னி ஜெனரல் சல்லி யாட்ஸ் நீக்கம்

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரான், இராக், யேமன், சிரியா, சூடான், லிபியா, சோமாலியா ஆகிய நாடுகளிலிருந்து வருவோரை

News image
Updated On :31 ஜனவரி 2017, 4:48 am

DIN

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரான், இராக், யேமன், சிரியா, சூடான், லிபியா, சோமாலியா ஆகிய நாடுகளிலிருந்து வருவோரை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க கடுமையான நிபந்தனைகள் விதித்தும், அகதிகளை ஏற்பதில் கட்டுப்பாடுகள் குறித்தும் புதிய ஆணையை அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்த தற்காலிக பெண் அட்டார்னி ஜெனரலை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பணியில் இருந்து நீக்கினார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லை தொடர்பான விஷயங்களில், சட்ட விரோத குடியேற்றம் போன்றவற்றில் மிகவும் மோசமான நிலையில் தற்காலிக அட்டார்னி ஜெனரல் சல்லி யாட்ஸ் நடந்து கொண்டார். அமெரிக்க மக்களை காப்பாற்றும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்ட உத்தரவுகளை அமல்படுத்தாமல், நீதித்துறையை சல்லி யாட்ஸ் ஏமாற்றிவிட்டார். இதையடுத்து அட்டார்னி ஜெனரல் பொறுப்பில் இருந்து சல்லி விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவருக்கு பதிலாக அந்த இடத்தில் ஜெப் செஷன்ஸ் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கும் நிலையில், கிழக்கு மாவட்டங்களுக்கு டானா போயன்டி என்பவரை டிரம்ப் அரசு நியமித்துள்ளது. புதிய செயல் இயக்குநராக தாமஸ் ஹோல்மன் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.