சிரியாவில் ராணுவ நிலைகள் மீது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 26 அரசு ஆதரவுப் படையினர் உயிரிழந்தனர்.
அவர்களில் பெரும்பாலனவர்கள் ஈரானைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறியதாவது:
சிரியாவின் ஹாமா மாகாணத்திலுள்ள சல்ஹாப் மற்றும் 47-ஆவது பிரிகேட் ராணுவ தளங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏவுகணைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.
அந்த ஏவுகணைகள் வீசப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது, இஸ்ரேல் ராணுவம் அந்தத் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தத் தாக்குதலில், சிரியாவைச் சேர்ந்த 4 பேர் உள்பட 26 வீரர்கள் உயிரிழந்தனர்.
மற்ற 22 வீரர்களும் வெளிநாடுகளைச் சேர்ந்த அரசு ஆதரவுப் படையினர் ஆவர். அவர்களில் பெரும்பாலானோர் ஈரானியர்கள்.
இதைத் தவிர, அலெப்போ நகருக்கு அருகே நைய்ராப் ராணுவ விமான தளம் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்தப் பகுதியில் தரையிலிருந்து தரை இலக்குகளைத் தாக்குதல் ஏவுகணைகள் வைக்கப்பட்டிருந்த கிடங்கை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்றார் அப்தெல் ரஹ்மான்.
இதுகுறித்து சிரியா அரசு ஊடகம் கூறுகையில், 'எதிரிகளின் புதிய அத்துமீறல்' என்று கண்டனம் தெரிவித்தது.
ஏற்கெனவே, ஹாம்ஸ் மாகாணத்தில் ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 7 ஈரானியர்கள் உள்பட 14 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்றாலும், அந்த நாடுதான் சிரியாவிலுள்ள ஈரான் நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பரவலாகக் கூறப்படுகிறது.
'தாக்குதல் குறித்து எதுவும் தெரியாது'

சிரியாவில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் குறித்து தங்களுக்கு 'எதுவும் தெரியாது' என்று இஸ்ரேல் உளவுத் துறை அமைச்சர் யிஸ்ரேல் காட்ஸ் ராணுவ வானொலியில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
எனினும், சிரியாவில் நிலவி வரும் வன்முறை, குழப்பம், நிலையற்ற தன்மை ஆகிய அனைத்துக்கும், அந்த நாட்டில் ஈரான் தனது ராணுவத்தை அனுப்பியதுதான் காரணம் என்று அவர் கூறினார்.
ஏற்கெனவே, ஹாம்ஸ் மாகாணத்திலுள்ள டி-4 விமான நிலையத்தில் கடந்த மாதத் துவக்கத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கும் இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை.
இருந்தாலும், இஸ்ரேல்தான் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கக் கூடும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சிரியா உள்நாட்டுப் போரில் ஈரான் ஈடுபடுவதற்கு எதிராக இஸ்ரேல் நீண்ட காலமாகவே எச்சரிக்கை விடுத்து வந்ததைக் குறிப்பிடுகின்றனர்.
டி-4 விமான தளத்திலிருந்து ஈரான் தங்கள் நாட்டின் மீது ஆளில்லா விமானங்களைப் பறக்க விடுவதாக இஸ்ரேல் கடந்த பிப்ரவரி மாதம் குற்றம் சாட்டியது. அதற்குப் பதிலடியாக சிரியாவிலுள்ள ஈரான் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் நிகழ்த்தியது. அப்போது, தாக்குதல் நிகழ்த்த வந்த இஸ்ரேலின் எஃப்-16 ரக போர் விமானத்தை சிரியா படையினர் சுட்டு வீழ்த்தியதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சகட்டத்தை எட்டியது.
இதையடுத்து, சிரியாவிலுள்ள வான் பாதுகாப்பு மண்டலங்கள், ஈரான் நிலைகள் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நிகழ்த்தப் போவதாக இஸ்ரேல் எச்சரித்தது. இந்த இலக்குகளில் டி-4 விமான தளமும் ஒன்று என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கேரள தோ்தல்: சிபிஎம் வேட்பாளா்கள் அறிவிப்பு!தா்மடத்தில் முதல்வா் பினராயி போட்டி!
கடன் நெருக்கடியில் தமிழ்நாடு?

குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவா்களுக்கு சிலிண்டா் கிடையாது! இணைப்பை ஒப்படைக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தல்!
அடகு நகையை மீட்டுத் தருவதாகக்கூறி 33 பவுன், ரூ.25 லட்சம் மோசடி செய்தவா் கைது!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

