கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வங்கதேச பொதுத்தேர்தலில் வன்முறை: 5 பேர் சாவு; 10 பேர் படுகாயம்  

வங்கதேச பொதுத்தேர்தலில் நடந்த வன்முறை சம்பவத்தில் 5 பேர் பலியாகினர்.மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். 

News image
Updated On :30 டிசம்பர் 2018, 12:29 pm

DIN

டாக்கா: வங்கதேச பொதுத்தேர்தலில் நடந்த வன்முறை சம்பவத்தில் 5 பேர் பலியாகினர்.மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். 

வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.30) பொதுத் தேர்தல் நடைபெறுவதையொட்டி 6 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.  இந்த தேர்தலில் 10.41 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். கட்சிகளின் பிரசாரம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தன . 

இதையடுத்து, பொதுத் தேர்தலை அமைதியாக நடத்தும் விதமாக நாடு முழுவதும் ராணுவம், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 6 லட்சம் பேர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை வங்கதேச தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 3ஜி மற்றும் 4ஜி சேவைகளை நிறுத்தி வைக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தபோதிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றன.

இந்நிலையில் பொதுத்தேர்தலில் நடந்த வன்முறை சம்பவத்தில் 5 பேர் பலியாகினர்.மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.  

ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி (பி.என்.பி.) ஆதரவாளர்களிடையே திடீரென கைகலப்பு உருண்டாகி மோதளாக மாறியது. இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது.  10 பேர் படு காயம் அடைந்து உள்ளனர்.  

இந்த சம்பவத்தைத் தொடந்து  போலீசார் பாதுகாப்புடன் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.