திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

கஜகஸ்தானில் பேருந்து தீப்பிடித்து பெரும் விபத்து: 52 பேர் உடல்கருகி பலி! 

கஜகஸ்தானின் வட மேற்குப் பகுதியில் வியாழன் அன்று காலை பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்த விபத்தில், அதில் பயணம் செய்த 52 பேர் உடல் கருகி பலியானார்கள்.

News image
Updated On :18 ஜனவரி 2018, 8:48 am

அஸ்தானா: கஜகஸ்தானின் வட மேற்குப் பகுதியில் வியாழன் அன்று காலை பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்த விபத்தில், அதில் பயணம் செய்த 52 பேர் உடல் கருகி பலியானார்கள்.

கஜகஸ்தானின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சமரா - சைம்கேன்ட் சாலை பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.30 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது. கஜகஸ்தானுடன் ரஷ்யாவை இணைக்கும் இந்த சாலையின் வழியாகத்தான், ரஷ்யாவில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்காக கஜகஸ்தான் தொழிலாளர்களை அழைத்துச் செல்வது வழக்கம்.

சம்பவத்தின் பொழுது குறிப்பிட்ட அந்தப் பேருந்தில் இரண்டு ஓட்டுநர்கள்  உட்பட 57 பேர் பயணம் செய்ததாக கஜகஸ்தான் நாட்டு அவசர சேவைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீ விபத்தின் பொழுது அதில் உள்ள 5 பேர் மட்டும் தப்பித்து விட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.      

தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.