

மெக்ஸிகோவையடுத்த மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவில், எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட பாதிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: அவ்வப்போது சீற்றத்தை ஏற்படுத்தி வரும் ஃபியூகோ எரிமலையில் திங்கள்கிழமை எதிர்பாராத பெருவெடிப்பு ஏற்பட்டது.
அதற்கு சற்று முன்னதாக அந்தப் பகுதி மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தியும், அதற்கான நேரம் இல்லாததால் எரிமலைப் பிழம்பு மற்றும் புகையில் சிக்கி 69 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.