சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் பொருளாதாரத் தடை: இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல் 

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்தாவிட்டால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :27 ஜூன் 2018, 12:56 pm IST

வாஷிங்டன்: ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்தாவிட்டால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்பும் நாடுகளில்  இராக், சவுதி அரேபியாவைத்  தொடர்ந்து  3வது இடத்தில் ஈரான் இருக்கிறது.

சமீபத்தில் ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தது. பின்னர் உடனடியாக உலக அளவில் ஈரானை தனிமைப்படுத்தும் வேலைகளை அமெரிக்கா செய்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருக்கிறார். அத்துடன் ஈரானின் பொருளாதார வளத்தை முடக்கும் வகையில் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை பிற நாடுகள் வாங்குவதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இதன் காரணமாக ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி முன்பை விடக் குறைந்து கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளது. இதன் மறைமுக விளைவாக கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்தாவிட்டால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

சீனா, இந்தியா உட்பட ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அனைத்து நாடுகளுக்கும் உடனடியாக அதனை நிறுத்திக் கொள்ளுமாறு ஏற்கெனவே கூறி விட்டோம். அல்லது கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வரும் நவம்பர் மாதத்திற்குள் முழுமையாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும்.

இருதரப்பு சந்திப்பின் போது இதுதொடர்பாக ஏற்கெனவே வலியுறுத்தபட்டுள்ளது. இனிமேலும் வலியுறுத்துவோம்.

பெரும்பாலான நாடுகள் எங்களது முயற்சிக்கு ஆதரவளித்து வருகின்றன. அவ்வாறு ஒத்துழைப்பு அளிக்காத நாடுகளின் மீது பொருளாதார தடைகள் விதித்து, வரத்தக ரீதியாக அந்த நாடுகளை முடக்குவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.