திருமணமான 15 நிமிடங்களில் விவாகரத்து: இது துபை 'ஸ்டைல்' 

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான துபையில் மணமகன் திருமணமான 15 நிமிடங்களில் தனது மனைவியை விவாகரத்து செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருமணமான 15 நிமிடங்களில் விவாகரத்து: இது துபை 'ஸ்டைல்' 
Published on
Updated on
1 min read

துபை: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபையில், திருமணமான 15 நிமிடங்களில் மணமகன தனது மனைவியை விவாகரத்து செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இஸ்லாமிய நாடுகளில் பெண்ணைத் திருமணம் செய்யும் இளைஞன் பெண் வீட்டாருக்கு 'மகர்' எனப்படும் திருமணப் பணம் வழங்குவது வழக்கம். அந்த வகையில். துபையினைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் 100000 திர்ஹாம் கொடுத்து உங்களது மகளை திருமணம் செய்து கொள்கிறேன், என்று மணமகளின் தந்தையுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

அவர்களிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, ஷரியத் நீதிமன்ற அலுவலகத்தில் திருமண ஒப்பந்த பத்திரத்தில் தம்பதிகள் கையெழுத்திட்டவுடன் 50000 திர்ஹாமும், அந்த அலுவலகத்திலிருந்து வெளியே வந்தவுடன் மீதி 50000 திர்ஹாமும் கொடுப்பதாக ஏற்பாடு.

பின்னர் அனைவரது முன்னிலையிலும் இவர்களது திருமணம் நடைபெற்றது. ஒப்பந்தப்படி கையெழுத்திட்டதும் முதலில் 50000 திர்ஹாமை மணமகன் தனது மாமனாரிடம் வழங்கியுள்ளார். திருமணம் முடிந்த வெளியில் வந்தவுடனேயே மீதியுள்ள 50000 திர்ஹாமை தருமாறு மணமகளின் தந்தை வற்புறுத்தியுள்ளார்.

பணம் காரிலிருப்பதாகவும் சிறிது நேரத்தில் சென்று எடுத்து தருவதாகவும் மணமகன் கூறியுள்ளார். ஆனால் இதனை ஏற்காத மாமனார், யாரையாவது அனுப்பி உடனே எடுத்து வந்து தருமாறு சண்டையிட்டுளார். இதனால் கோபம் கொண்ட மணமகன், தனக்கு அவமானம் நேர்ந்துவிட்டதாகக் கூறி, உங்களது பெண்ணுடன் வாழ விரும்பவில்லை என்று கூறி திருமணமான 15 நிமிடத்திலேயே மூன்று முறை தலாக் சொல்லி மணமகளை விவாகரத்து செய்துள்ளார். இதன் காரணமாக அங்கே பரபரப்பு உண்டானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com