அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பாகிஸ்தானில் இன்று 35 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்

பாகிஸ்தானில் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ராஜிநாமா செய்ததால் காலியாக உள்ள 35 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஞாயிறன்று நடக்கிறது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:04 pm

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ராஜிநாமா செய்ததால் காலியாக உள்ள 35 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஞாயிறன்று நடக்கிறது. 

பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்துக்கும், பல்வேறு மாகாண சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் தான் போட்டியிட்ட 5 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வென்றார். இப்படி வெற்றி பெற்றவர்கள் ஒரு தொகுதியை வைத்துக்கொண்டு எஞ்சிய தொகுதிகளில் ராஜிநாமா செய்தனர்.அவ்வாறு காலியான 35 தொகுதிகளில் ஞாயிறன்று இடைத்தேர்தல் நடக்கிறது. அவற்றில் 11 தொகுதிகள் நாடாளுமன்ற தொகுதிகள் ஆகும். எஞ்சியவை மாகாண சட்டசபை தொகுதிகள் ஆகும்.

இந்த 11 நாடாளுமன்ற தொகுதிகளில் 9 தொகுதிகள் பஞ்சாப் மாகாணத்திலும், சிந்து மற்றும் கைபர் பக்துங்வா மாகாணங்களில் தலா ஒரு தொகுதியும் உள்ளன. மொத்தமுள்ள 35 தொகுதிகளில் 641 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். இறுதிக்கட்ட பரிசீலனைக்குப் பிறகு தற்போது 372 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இடைத்தேர்தலுக்காக பாகிஸ்தானில் 5 ஆயிரத்து 193 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 848 வாக்குச்சாவடிகள் மிகுந்த பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. 

காலை 8 மணியளவில் துவங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிவரை வாக்கு பதிவு நடைபெறும்.  வாக்குப்பதிவு முடிந்த உடனேயே ஓட்டு எண்ணிக்கை துவங்கி விடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.