ஈரானில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில், விமான சிப்பந்திகள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மோசமான வானிலை காரணமாக, டெக்ரானின் தென்மேற்கு பகுதியில் சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் கிர்கிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான போயிங் 707 ரக சரக்கு விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானம் உடனடியாக தீப்பிடித்ததால், விமானத்தில் பயணம் செய்த 10 விமான சிப்பந்திகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தகவல் அறிந்து ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் உள்ளிட்ட மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
விபத்திற்குள்ளான சரக்கு விமானம் கிர்கிஸ்தானிலிருந்து ஈரானுக்கு மாமிசத்தை சுமந்து சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








