ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் தாக்குதல்: தலிபான்கள் 20 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப் படைகள் நிகழ்த்திய வான்வழி தாக்குதலில் தலிபான் தீவிரவாதிகள் 20 பேர் பலியானார்கள்


காபூல்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப் படைகள் நிகழ்த்திய வான்வழி தாக்குதலில் தலிபான் தீவிரவாதிகள் 20 பேர் பலியானார்கள்.
ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் அமெரிக்க கூட்டணி படையினர் அரசுப் படைகளுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேசமயம் தலிபான் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தையம் அரசுத் தரப்பில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கடந்த 2 நாட்களாக இந்த பேச்சுவார்த்தையும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப் படைகள் நிகழ்த்திய வான்வழி தாக்குதலில் தலிபான் தீவிரவாதிகள் 20 பேர் பலியானார்கள்.
அந்நாட்டின் கஜினி மாகாணத்தில் உள்ள காராபாக் மாவட்டத்தில் சையது வாலி மற்றும் மர்வார்டா ஆகிய பகுதிகளில் நடந்த இந்த வான்வழி தாக்குதலில் 20 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...