பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

உணவக சமையலறையில் உல்லாசக் குளியல்: பணி நீக்கம் செய்யப்பட்ட  ஊழியர் 

அமெரிக்காவில் துரித உணவகமொன்றின் உள்ள பாத்திரங்கள் கழுவும் பெரிய தொட்டியில், ஊழியர் ஒருவர் குளிக்கும் விடியோ வெளியானதை அடுத்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

Published On :

ப்ளோரிடா: அமெரிக்காவில் துரித உணவகமொன்றின் உள்ள பாத்திரங்கள் கழுவும் பெரிய தொட்டியில், ஊழியர் ஒருவர் குளிக்கும் விடியோ வெளியானதை அடுத்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில், வெண்டேஸ்(wendeys) எனப்படும் துரித உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் வேலைபார்க்கும் ஊழியர் ஒருவர், அண்மையில் அங்குள்ள சமையலறையில் பாத்திரங்கள் கழுவும் பெரிய தொட்டியில் சோப்பு நீரை நிரப்பி, உற்சாகமாக  குளித்தார். 

இவரது செயலை அங்குள்ள சக ஊழியர்கள் கிண்டலடித்து சிரிக்கும் விடியோ காட்சியானது அண்மையில் முகநூலில் வைரலாகப் பகிரப்பட்டது.

இதனைப்பார்த்த பலரும் குறிப்பிட்ட ஊழியரின் செயல் அருவறுப்பாக இருப்பதாக கூறியதோடு, அவரது செயலுக்கு கடும் கண்டனமும் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த விடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வென்டேஸ் உணவக உரிமையாளர், குறிப்பிட்ட ஊழியரை பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.