அமெரிக்காவில் 11 நாடுகளின் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 11 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் கலந்துரையாடினார்.
அமெரிக்காவில் 11 நாடுகளின் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
Published on
Updated on
1 min read

நியூயார்க்கில் பருவநிலை நடவடிக்கை மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றினார். இதையடுத்து பல்வேறு நாடுகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்து அந்தந்த நாடுகளுடனான நட்புறவு, முதலீடு உள்ளிட்ட புரிந்துணர்வு பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்நிலையில், பிரதமர் மோடியுடன் அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், பல்கேரியா, துருக்கி, உஸ்பெக்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, இரு நாடுகள் இடையிலான கூட்டமைப்பு, வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, அமைதி, எரிசக்தி, பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான முக்கியப் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com