கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

துருக்கியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவு

தென்கிழக்கு துருக்கியின் சிர்த் மாகாணத்தில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வியாழக்கிழமை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

News image
Southeast Turkey shaken by 5.0 magnitude quake 
Updated On :3 டிசம்பர் 2020, 7:43 am

ANI

தென்கிழக்கு துருக்கியின் சிர்த் மாகாணத்தில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வியாழக்கிழமை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் காலை 8:45 மணிக்கு தாக்கியதாக துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

20 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்தாண்டு மட்டும் இரண்டு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒன்று
கடந்த அக்டோபர் மாதம் மேற்கு துறைமுக நகரமான இஸ்மிரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 117 பேர் பலியாகினர். மற்றொன்று எலாஜிக் மாகாணத்தில் 41 பேர் உயிரிழந்தனர். 

கடந்த 1999ல் வடமேற்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 17,000 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.