தாய்லாந்தில் கடந்த 2 வாரங்களாகப் பெய்து வந்த மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.
தாய்லாந்து நாட்டின் நகோன் சி தம்மரத் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் சனிக்கிழமை வெள்ளபாதிப்பு குறித்து தேசிய பேரிடர் தடுப்பு ஆணையம் அறிக்கை வெளியிட்டது. அதன்படி இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 29 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாகாணங்களில் உள்ள 101 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 4,130 கிராமங்களில் மொத்தம் 5,55,194 வீடுகள் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளன.
சூரத் தானி, பட்டாலுங், சாங்ஹ்லா, சம்பன், கிராபி, டிராங், சாத்துன், யலா, பட்டானி, நாராதிவத் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
மத்திய, மாநில அமைச்சா்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு!

யாருடன் கூட்டணி?: இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்!

மதுராந்தகத்தில் கலைஞா் நூலகம் திறப்பு

16.3.1976: பல எக்சைஸ் வரிகள் குறைப்பு - சோப்பு, ரெடிமேட் துணி, பிளேடு மீது வரி வெட்டு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

