அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உலகின் மிகவும் வயதான பாண்டா கரடி மரணம்

சீன மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வந்த 38 வயதான பாண்டா கரடி உடல்நலக்குறைவால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
உலகின் மிகவும் வயதான பாண்டா கரடி மரணம்
Updated On :22 டிசம்பர் 2020, 7:42 am

DIN

சீன மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வந்த 38 வயதான பாண்டா கரடி உடல்நலக்குறைவால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகராட்சியில் உள்ள மிருகக்காட்சிசாலையில் உலகின் வயதான ஜின்க்சிங் எனப்படும் பாண்டா கரடி பராமரிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி உடல்நிலை மோசமடைந்த பாண்டா கரடி மூச்சுத் திணறல், இருமல் மற்றும் வயிற்று பாதிப்பு ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்தது. தொடர்ந்து அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

செரிமானக் கோளாறுகளால் சுவாசக் குழாய்களில் தொற்று பாதிப்புக்குள்ளான பாண்டா கரடி டிசம்பர் மாத தொடக்கத்தில் இறந்தது.

மிருகக்காட்சிசாலையின் தொழில்நுட்ப இயக்குனர் யின் யாங்கியாங் உலகெங்கிலும் 30க்கும் மேற்பட்ட மாபெரும் பாண்டாக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழவில்லை எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.