நைஜீரியாவில் ஆட்டோ விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியானார்கள்.
இதுகுறித்து கடுனா மாகாண ஆணையர் சாமூவேல் அருவான் கூறுகையில், வடக்கு நைஜீரியாவில் கடுனா-அபுஜா நெடுஞ்சாலையில் நேற்று ஆட்டோ விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 12 பேர் பலியானார்கள். 25க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்னர் என்றார். விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிவேகம், மோசமான சாலை காரணமாக ஆட்டோ விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.