கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்தும் டொனால்ட் டிரம்ப் விடுவிப்பு

​அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பு செனட் அவையில் தோல்வியடைந்ததையடுத்து, இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2020, 9:27 am

DIN


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பு செனட் அவையில் தோல்வியடைந்ததையடுத்து, இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர் புதன்கிழமை விடுவிக்கப்பட்டார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டால், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ஜோ பிடன் போட்டியிடலாம் என்று எதிா்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், தனது தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்காக ஜோ பிடனின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், அவர் மீது ஊழல் விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசை டிரம்ப் வற்புறுத்தியதாகக் கூறப்பட்டது. ஜோ பிடனும், அவரது மகனும் உக்ரைனில் செய்து வரும் தொழில் தொடர்பாக அவர்கள் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டுமென்று அந்த நாட்டு அரசுக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு, அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில், டிரம்ப் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், இதுதொடர்பான விசாரணையில் நாடாளுமன்றத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி, அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான இரு தீர்மானங்களை பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சினர் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றினர்.

இந்நிலையில், செனட் அவையில் இதுதொடர்பான வாக்கெடுப்பு புதன்கிழமை நடத்தப்பட்டது. இதில், முதல் குற்றச்சாட்டான அதிகார துஷ்பிரயோகம் மீதான வாக்கெடுப்பில் டிரம்ப்புக்கு ஆதரவாக 52 உறுப்பினர்களும், டிரம்ப்புக்கு எதிராக 48 உறுப்பினர்களும் வாக்களித்தனர். டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றால், அவருக்கு எதிராக 66 உறுப்பினர்கள் வாக்களித்திருக்க வேண்டும். எனவே, முதல் குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது குற்றச்சாட்டு மீதான வாக்கெடுப்பிலும், 53-47 என்றே உறுப்பினர்கள் வாக்களிக்க இதில் இருந்தும் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்.

Story image

100 இடங்களைக் கொண்ட  செனட் அவையில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 47 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து டிரம்ப் விடுவிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியின் 20 உறுப்பினர்கள் டிரம்ப்புக்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.