தன்னை மனித உரிமைக் காப்பாளர் என அழைத்து வரும் அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர், மனித உரிமைப் பேரிடரை ஏற்படுத்தியவர் ஆவர் என்பதை அமெரிக்காவில் நடந்து வரும் சம்பவத்தை வைத்து தற்போது உணர்ந்து கொள்ளலாம். மனித உரிமைகள் குறித்து பேசி வரும் அமெரிக்கா, மனித உரிமைகளில் தன் பொறுப்புகளை புறக்கணித்து, மக்களின் உயிரை அலட்சியம் செய்து வருகிறது என்று பிரிட்டனின் தி இன்டிபென்டென்ட் நாளிதழின் இணையதளத்தில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவில் பெரிய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமானது, அமெரிக்க அரசு கடைப்பிடிக்கும் இரட்டை நிலைப்பாட்டை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.