கரோனா: இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 756 பேர் பலி
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா தொற்று காரணமாக 756 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் முதல் முதலில் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, உலகின் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் 722,196 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பால் கொவைட்-19 எனப் பெயரிடப்பட்ட அந்த நோய்த்தொற்று காரணமாக இதுவரை 33,976-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகினா்.
இதையடுத்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உலக மக்கள்தொகையில் சுமாா் மூன்றில் ஒரு பங்கினா் தங்கள் வீடுகளில் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் கரோனா வைரஸால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா தொற்று காரணமாக 756 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் அங்கு பலியானர்களின் எண்ணிக்கை 10,779ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,689ஆக உயர்ந்துள்ளது. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அந்த நாட்டில் சுமாா் 142,178 லட்சம் பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.