சிங்கப்பூரில் காவலர்களை திட்டிய இந்தியருக்கு சிறைத் தண்டனை
சிங்கப்பூரில், கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு வலியுறுத்திய காவலரை தகாத வார்த்தைகளால் பேசிய இந்தியருக்கு 7 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


சிங்கப்பூரில், கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு வலியுறுத்திய காவலரை தகாத வார்த்தைகளால் பேசிய இந்தியருக்கு 7 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியது மற்றும் அவர்களது முகத்தை உடைத்து விடுவேன் என்று மிரட்டியது என இரண்டு பிரிவுகளின் கீழ் சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியரான ரவி சின்னத்தம்பி சுப்ரமணியம் (53) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் சென்ற போதும், தேநீர் கடை ஒன்றிலும் என இரண்டு முறை இவர் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டி, சமூக இடைவெளியை முறையாகப் பின்பற்றாமல் இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.
அதில்லாமல், ரவி சின்னத்தம்பி சுப்ரமணியம், தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்திருப்பதும், அவர் மீதான வழக்குகளுக்கு ஒரு நீண்ட பட்டியலே இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, சிறைத் தண்டனையுடன், அவருக்கு மன நல ஆலோசனை வழங்கவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...