மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா: ஒடிசா, பிகார், ராஜஸ்தான் பாதிப்பு நிலவரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ஒடிசா, பிகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :16 மே 2020, 7:48 am

PTI


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ஒடிசா, பிகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

ஒடிசா

ஒடிசாவில் மேலும் 65 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 737 ஆக உயர்ந்துள்ளது. இதில் 568 பேர் சிகிச்சையில் உள்ளனர், 166 பேர் குணமடைந்துள்ளனர், 3 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை ஒடிசா மாநிலத்தில் 86,140 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

பிகார்

பிகாரில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

இதுவரை பிகாரில் கரோனா தொற்றுக்கு 1,033 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 438 பேர் இதுவரை நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். 

ராஜஸ்தான் 

ராஜஸ்தானில் இன்று காலை 9 மணி நிலவரப்படி நேற்று ஒரே நாளில் புதிதாக 91 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து அங்குப் பாதிப்பு எண்ணிக்கை 4,838 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 125 ஆகவும் உயர்ந்துள்ளது. 1,941 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர் என்று அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.