மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும்: ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

News image
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும்: ஜோ பைடன்
Updated On :15 ஏப்ரல் 2021, 6:03 am

PTI


வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் சுமார் 20 ஆண்டுகளாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் இருந்தவாறு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் அனைத்தும், வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி, பயங்கரவாதத் தாக்குதலின் 20-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, 2001ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுடன் நடைபெற்று வரும் போரில் உயிரிழந்த அமெரிக்கப் படை வீரர்களின் நினைவிடத்துக்குச் சென்று ஜோ பைடன் அஞ்சலி செலுத்தினார்.

ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த அல் கய்தா பயங்கரவாதிகள், கடந்த 2001-ஆம் ஆண்டு விமானத்தைக் கடத்திச் சென்று அமெரிக்காவில் இருந்த உலக வர்த்தகக் கட்டத்தின் மீது மோதச் செய்து நடத்திய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.