தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதிய விதிக்கு எதிர்ப்பு..போராட்ட களமான பாரிஸ்

பிரான்ஸில் கரோனா அனுமதி சீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

News image

கோப்புப்படம்

Updated On :2 ஆகஸ்ட் 2021, 12:27 pm

DIN

பிரான்ஸில் கரோனா அனுமதி சீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கரோனா அனுமதிச் சீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 
விடுதிகள் உள்பட பொது இடங்களுக்கு செல்ல கரோனா அனுமதி சீட்டு கட்டாயமாக்கப்பட்டதை தொடர்ந்து, மூன்றாவது முறையாக வார இறுதி நாள்களில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். 

இதையடுத்து, பாரிஸில் 3,000 பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். போராட்டத்தை கலைக்கும் வகையில் கண்ணீர்ப்புகை குண்டு வீசப்பட்டு தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது. இதனால், பலருக்கு காயம் ஏற்பட்டது.

பிரான்ஸ் முழுவதும் டெல்டா வகை கரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில், கரோனா அனுமதி சீட்டு முறையை அந்நாட்டு அரசு அமல்படுத்தியது. பெரும்பாலான மக்கள் அனுமதி சீட்டுக்கு ஆதரவாக இருந்தாலும், சிலர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக நாடுகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், தடுப்பூசியை கட்டாயப்படுத்தாமலேயே மக்கள் தானாக முன்வந்து செலுத்தி கொள்ளும் வகையில் புதிய விதிகளை பிரான்ஸ் அறிவித்திருந்தது.

அதன்படி, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே சுகாதார அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.