தேவை ஏற்பட்டால் தலிபான்களுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக இருப்பதாக அந்த நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஆப்கன் பிரச்னைக்கு அரசியல் தீா்வு காண்பதற்கான ராஜீய ரீதியிலான எங்களது முயற்சிகள் தொடும்.
அதற்குத் தேவைப்பட்டால், தலிபான்களுடன் இணைந்து பணியாற்றுவதற்குக் கூட தயாராக இருக்கிறோம்.
ஆப்கன் விவகாரத்தில் நாங்கள் கொண்டுள்ள உறுதிப்பாடும் என்றும் நீடித்திருக்கும் என்றாா் அவா்.