/

டெல்டா வகையின் தீவிரத்தன்மையால் தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறது: அமெரிக்கா சுகாதார அமைப்பு

டெல்டா கரோனா வைரஸின் தீவிரத்தன்மைக் காரணமாக தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறது என அமெரிக்க சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :25 ஆகஸ்ட் 2021, 11:05 am IST

டெல்டா கரோனா வைரஸின் தீவிரத்தன்மைக் காரணமாக தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறது என அமெரிக்க சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

டெல்டா வகை கரோனா தீவிரமடைந்த பிறகு, முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியின் செயல்திறன் 66 சதவிகிதமாக குறைந்துள்ளது என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இவ்வகை கரோனா பரவுவதற்கு முன்பு தடுப்பூசியின் செயல்திறன் 91 சதவிகதமாக இருந்தது.

நோயின் தன்மை மற்றும் இறப்பு விகிதம் குறித்து நோய் கட்டுப்பாடு மையம் வெளியிட்ட வாராந்திர அறிக்கையில், "தடுப்பூசி பாதுகாப்பளிக்கிறது. இதுகுறித்த ஆய்வுகள் கவனமாக விளக்கப்பட வேண்டும். காலபோக்கில் தடுப்பூசியின் செயல்திறன் குறைந்து அதன் பயன்பாடு குறித்த கணக்கீடு துல்லியமற்றதாக மாறுகிறது. 

நோய் தடுப்பில் கரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறைவதாக இடைக்கால ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டபோதிலும் நோய் பரவலானது மூன்றில் இரண்டு பங்காக குறைந்திருப்பது தடுப்பூசியின் முக்கியத்துவத்தையும் பயன்பாட்டையும் எடுத்துரைக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்டா வகை கரோனா தீவிரமடையும் பட்சத்தில் தடுப்பூசியன் ஆற்றல் குறையும் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் நாடுகள் மேற்கொண்ட ஆய்விலும் தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.