
சூடானில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்லா மேற்கு கோர்டோபான் மாநிலத்தில் தங்க சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதையும் படிக்க | வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்திய இஸ்ரேல்
இதில் சிக்கி சுரங்கத் தொழிலாளர்கள் 38 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சூடானின் தலைநகர் கார்டூமில் இருந்து 500 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த சுரங்கத்தை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.