கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 462 பேர் பலி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதித்தவர்களில் 462 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,95,411 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 3:27 am

DIN

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதித்தவர்களில் 462 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,95,411 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு அமெரிக்கா அதிகயளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த வரிசையில் இந்தியாவும், பிரேசிலும் உள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவில் இதுவரை 3,56,445 உயிரிழப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. 1,95,441 உயிரிழப்புகளுடன் பிரேசில் இரண்டாவது இடத்திலும், 1,49,205 உயிரிழப்புகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. 

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,605 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த தொற்று பாதிப்பு 77,00,578 ஆக உயர்ந்துள்ளது. அதே கால இடைவெளியில் 462 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,95,411 ஆக அதிகரித்துள்ளது. 

தொற்றுநோய் பரவல்களுக்கு மத்தியில் பட்டாசுகள் இல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாடிய போதிலும், புத்தாண்டு தினத்தன்று பொதுமக்கள் கடற்கரைகளுக்கு வருவதைத் தடுக்க உள்ளூர் அதிகாரிகள் போராடினர்.

சாவ் பாலோவில் உள்ள ரிவியரா டி சாவ் லூரென்கோ கடற்கரைக்கு வரும் பயணிகளை தடுப்பதற்காக போலீசார்  மணல் மீது புகை குண்டுகளை வீசி தடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.