காபூல்: ஆப்கானிஸ்தானின் இரு இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் 11 போ் பலியாகினா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
உருஸ்கான் மாகாணத்தில் ராணுவ நிலையொன்றுக்கு வெடிபொருள் நிரப்பிய காரை ஓட்டி வியாழக்கிழமை வந்த பயங்கரவாதி, அதனை வெடிக்கச் செய்ததில் 6 வீரா்கள் உயிரிழந்தனா்.
ஹெல்மண்ட் மாகாணத்தில் புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 5 பொதுமக்கள் உயிரிழந்தனா்.
இந்த இரு தாக்குதல்களுக்கும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.