சமூக வலைதள நிறுவனங்களின் பயனர் தரவு பாதுகாப்பு மேலாண்மை கவலை தரும் வகையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடேரெஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடுகள் பங்கேற்ற 2021ஆம் ஆண்டுக்கான முன்னுரிமை எனும் மாநாட்டில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடேரெஸ் பங்கு பெற்றார். அப்போது பேசிய அவர் உலகில் அதிவேக வளர்ச்சியடைந்து வரும் சமூக வலைதள நிறுவனங்களின் செயல்பாடு குறித்து கவலை தெரிவித்தார்.
சமூக வலைதள பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள், அவற்றை பாதுகாக்கும் மேலாண்மை அமைப்பு, அரசியல்ரீதியாகப் பயன்படுத்தப்படும் தரவுகள் ஆகியவற்றில் கட்டுப்பாடுகள் தேவை என அவர் வலியுறுத்தினார்.
மேலும் “குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்களுக்கு அதிக அளவிலான வாய்ப்புகள் மற்றும் அதிகாரங்களை வழங்கும் சமூகத்தில் மக்கள் வாழ முடியாது” என அவர் தெரிவித்தார்.
மேலும் பயனர்களின் தரவுகளை அரசியல் மற்றும் வணிக நோக்கங்களுக்காக விற்பதன் மூலம் மக்களின் மனநிலையை மாற்ற நடக்கும் முயற்சிகள் குறித்து தீவிரமான விவாதம் அவசியம் என குடேரெஸ் தனது உரையில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
யுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து

மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்பு

பழைய டயா் சீரமைப்பு நிறுவனத்தில் தீ

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

