கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: ஊரடங்கு நீட்டிப்பு

ஆஸ்திரேலியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :21 ஜூலை 2021, 6:43 am

DIN

ஆஸ்திரேலியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துவருகிறது. ஊரடங்கு திரும்பபெறப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆஸ்திரேலியாவின் 50 சதவிகித மக்கள் வீட்டிலேயே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெரு நகரமான சிட்னி அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 110 பேருக்கு கரோனா ஏற்பட்டுள்ளது. டெல்டா வகை கரோனா பரவிவந்த நிலையில், நான்கு வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இரண்டு வாரங்களாக ஊரடங்கு அமலில் இருந்த விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் முதலமைச்சர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், "சில வாரங்களக்கு முன்பு ஊரடங்கு அமல்படுத்தவில்லை எனில் தற்போது 110 ஆக இருக்கும் கரோனா எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்திருக்கும். ஆனால், நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றார்.

பெருந்தொற்று பரவ தொடங்கி 18 மாதங்கள் கடந்த நிலையில், 1 கோடியே 30 லட்சம் ஆஸ்திரேலியர்கள் கடும் ஊரடங்கில் இருந்துவருகின்றனர். இதுவரை, 11 சதவிகித்தினருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.