கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ராணுவ உதவியை நாடும் ஆஸ்திரேலியா: அதிகரிக்கும் கரோனா பரவல்

ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :29 ஜூலை 2021, 8:33 am

DIN

ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஒன்றரை மாதமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், சமீப காலத்தில் இல்லாத அளவுக்கு, கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) அதிகரித்தது.

இந்நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. டெல்டா வகை கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில் பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்திரேலியா திணறி வருகிறது. இதன் காரணமாக, கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக பொருளாதாரம் மந்தநிலையில் தள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், "ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 239 பேருக்கு புதிதாக கரோனா உறுதியானது. நிலைமை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்பு இன்னும் மோசமாக மாறவுள்ளது.

தென்மேற்கு சிட்னியில் அமலில் உள்ள கடுமையான ஊரடங்கு நகரின் மேற்கு பகுதிகளுக்கும் அறிவிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள உயர் நிலை பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் மற்ற பகுதிகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

பொருளாதார நிலை குறித்து பேசிய ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன், "கரோனாவால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு வாரத்திற்கு 74,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும். ஊதியத்தை இழந்த குறைந்த வருமானத்தை ஈட்டும் குடும்பத்தினருக்கு கூடுதல் சமூக நல உதவித் தொகை வழங்கப்படும்.

தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் சதவிகிதம் அதிகரித்தால் வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான உத்தரவுகள் இந்தாண்டு இறுதிக்குள் திரும்பப்பெற்று கொள்ளப்படும். ஆனால், எங்களுக்கு வேறு வழியில்லை" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.