ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்ஆன்லைனில் டாஸ்மாக் மதுபானத்தை முன்பதிவு மட்டுமே செய்ய முடியும்; வீடுகளுக்கு டெலிவரி கிடையாது: அமைச்சர் விக்னேஷ்வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

காதலுக்காக அரச பட்டத்தை உதறி தள்ளிய ஜப்பான் இளவரசி; மனங்களை இணைக்கும் அக்டோபர் 26

ஜப்பான் இளவரசி மகோவுக்கும் கெய்கோமுரோவுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

News image

ஜப்பான் இளவரசி மகோ

Updated On :28 ஜனவரி 2024, 9:46 am IST

ஜப்பான் இளவரசி மகோ, தன்னுடைய கல்லூரி நண்பரை அக்டோபர் 26ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் காதல் பொதுவெளியில் விவாதத்தை கிளப்பிய நிலையில், சிலர் கடுமையாக விமரிசித்துவந்தனர்.

ஜப்பான் மன்னர் நருஹிதோவின் இளைய சகோதரரின் மகளான மகோவுக்கும் கெய்கோமுரோவுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. முன்னதாக, இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவதற்காக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் மகோவும் கெய்கோமுரோவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

இவர்களின் திருமணம் எப்போது நடைபெறும் என பெரும் எதிர்பார்ப்பு கிளம்பிய நிலையில், கெய்கோமுரோவின் தாய்க்கும் அவரை திருமணம் செய்யவிருந்தவருக்கிடையே பண பிரச்னை நிலவுவதாக செய்தி இணையதளங்கள் தகவல் வெளியிட்டன. இதையடுத்து, 2018ஆம் ஆண்டு நடைபெறவிருந்த ஜப்பான் இளவரசியின் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.

அந்தாண்டு ஆகஸ்ட் மாதம், கெய்கோமுரோ சட்ட படிப்பை மேற்கொள்வதற்கு அமெரிக்கா சென்றுவிட்டார். இதனிடையே, இந்த திங்கள்கிழமைதான் அவர் ஜப்பானுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், ஜப்பான் இளவரசியின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரச குடும்பத்திலிருந்து வெளியே ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில் அவர் அரசு குடும்பத்தை விட்டு வெளியேற நேரிடும். அந்த வகையில், ஜப்பான் இளவரசி அரச பட்டத்தை துறக்கவுள்ளார். அரச திருமணங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் யாவும் இந்த திருமணத்தில் நடைபெறாது. அதேபோல், அரச குடும்பத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு கோடி கணக்கில் பணம் அளிப்பது வழக்கம். ஆனால், மகோ அதனையும் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மகோவும் கெய்கோமுரோவும் உள்ளூர் அரசு அலுவலகத்தில் தங்களின் திருமணத்தை பதிவு செய்யவுள்ளார்கள். அதேபோல், மகோ அரசு குடும்பத்திலிருந்து வெளியேறுவதும் அதிகாரப்பூர்வதாக பதிவு செய்யப்படும் என செய்திகள் கூறுகின்றன. அரச குடும்பத்திலிருந்து வெளியே ஒருவரை மகோ திருமணம் செய்து கொள்வது ஜப்பான் ஊடகங்களில் பெரும் பேசு பொருளானது.

இதுகுறித்து மக்களிடையே சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், திருமணத்திற்கு ஆதரவாக 38 சகவிகிதத்தினரும் எதிராக 35 சகவிகிதத்தினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.