முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காதலுக்காக அரச பட்டத்தை உதறி தள்ளிய ஜப்பான் இளவரசி; மனங்களை இணைக்கும் அக்டோபர் 26

ஜப்பான் இளவரசி மகோவுக்கும் கெய்கோமுரோவுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

News image
ஜப்பான் இளவரசி மகோ
Updated On :1 அக்டோபர் 2021, 9:50 am

DIN

ஜப்பான் இளவரசி மகோ, தன்னுடைய கல்லூரி நண்பரை அக்டோபர் 26ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் காதல் பொதுவெளியில் விவாதத்தை கிளப்பிய நிலையில், சிலர் கடுமையாக விமரிசித்துவந்தனர்.

ஜப்பான் மன்னர் நருஹிதோவின் இளைய சகோதரரின் மகளான மகோவுக்கும் கெய்கோமுரோவுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. முன்னதாக, இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவதற்காக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் மகோவும் கெய்கோமுரோவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

இவர்களின் திருமணம் எப்போது நடைபெறும் என பெரும் எதிர்பார்ப்பு கிளம்பிய நிலையில், கெய்கோமுரோவின் தாய்க்கும் அவரை திருமணம் செய்யவிருந்தவருக்கிடையே பண பிரச்னை நிலவுவதாக செய்தி இணையதளங்கள் தகவல் வெளியிட்டன. இதையடுத்து, 2018ஆம் ஆண்டு நடைபெறவிருந்த ஜப்பான் இளவரசியின் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.

அந்தாண்டு ஆகஸ்ட் மாதம், கெய்கோமுரோ சட்ட படிப்பை மேற்கொள்வதற்கு அமெரிக்கா சென்றுவிட்டார். இதனிடையே, இந்த திங்கள்கிழமைதான் அவர் ஜப்பானுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், ஜப்பான் இளவரசியின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரச குடும்பத்திலிருந்து வெளியே ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில் அவர் அரசு குடும்பத்தை விட்டு வெளியேற நேரிடும். அந்த வகையில், ஜப்பான் இளவரசி அரச பட்டத்தை துறக்கவுள்ளார். அரச திருமணங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் யாவும் இந்த திருமணத்தில் நடைபெறாது. அதேபோல், அரச குடும்பத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு கோடி கணக்கில் பணம் அளிப்பது வழக்கம். ஆனால், மகோ அதனையும் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மகோவும் கெய்கோமுரோவும் உள்ளூர் அரசு அலுவலகத்தில் தங்களின் திருமணத்தை பதிவு செய்யவுள்ளார்கள். அதேபோல், மகோ அரசு குடும்பத்திலிருந்து வெளியேறுவதும் அதிகாரப்பூர்வதாக பதிவு செய்யப்படும் என செய்திகள் கூறுகின்றன. அரச குடும்பத்திலிருந்து வெளியே ஒருவரை மகோ திருமணம் செய்து கொள்வது ஜப்பான் ஊடகங்களில் பெரும் பேசு பொருளானது.

இதுகுறித்து மக்களிடையே சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், திருமணத்திற்கு ஆதரவாக 38 சகவிகிதத்தினரும் எதிராக 35 சகவிகிதத்தினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.