மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தேச துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஜெனரலின் மகன் சிக்கியது எப்படி?

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதை முன்னாள் ராணுவ ஜெனரல் ஜாஃபர் மேஹதி அஸ்காரியின் மகன் விமரிசித்திருந்தார்.

News image
கமர் ஜாவேத் பாஜ்வா (கோப்புப்படம்)
Updated On :30 அக்டோபர் 2021, 11:29 am

DIN

பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா ராஜிநாமா செய்யக் கோரி முன்னாள் ராணுவ ஜெனரல் ஜாஃபர் மேஹதி அஸ்காரியின் மகன் கடிதம் எழுதியிருந்தார். இதற்காக, அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கமர் ஜாவேத் பாஜ்வாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் பதவிக் கால நீட்டிப்பை விமரிசித்து ஹாசன் அஸ்காரி கடிதம் எழுதியிருந்தார். பாஜ்வா ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 

இதன் காரணமாக, ஹாசன் அஸ்காரிக்கு எதிராக தொடரப்பட்ட தேச துரோக வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபணமாகியுள்ளது. இதுகுறித்து பிபிசி வெளியிட்ட செய்தியில், "இந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு அலுவலர் ஹாசனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

சாஹிவாலில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் இருக்கும் தனது மகனைச் சந்திப்பதில் சிரமம் இருப்பதாக ஜாஃபர் மேஹதி அஸ்காரி புகார் அளித்திருந்தார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தேச துரோக வழக்கின் விசாரணை கேமராவில் பதிவு செய்யப்பட வேண்டும் என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் ஜனவரி மாதம் தெரிவித்திருந்தது. விசாரணையின் போது, ​​ராணுவத்தை சேராத ஒருவரை ராணுவ நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. குடிமகன்களை ராணுவ நீதிமன்றத்தில் விசாரிப்பது குறித்த முடிவை நீதிமன்றம் எடுக்கவுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.