அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு ரூ.1949 கோடி அபராதம் விதித்த அயர்லாந்து

பயனர்களின் தனியுரிமை தரவுகளை தவறாகக் கையாண்டதாகக் கூறி வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு அயர்லாந்து அரசு இந்திய மதிப்பில் ரூ.1949 கோடி அபராதம் விதித்துள்ளது.

News image
வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு ரூ.1949 கோடி அபராதம் விதித்த அயர்லாந்து
Updated On :2 செப்டம்பர் 2021, 3:06 pm

DIN

பயனர்களின் தனியுரிமை தரவுகளை தவறாகக் கையாண்டதாகக் கூறி வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு அயர்லாந்து அரசு இந்திய மதிப்பில் ரூ.1949 கோடி அபராதம் விதித்துள்ளது.

வாட்ஸ்ஆப் செயலி உலகம் முழுவதும் பரவலாக பயனபடுத்தப்பட்டு வருகிறது. பயனர்களின் தரவுகளை விற்பனை செய்வதாக அவ்வப்போது அந்நிறுவனத்தின் மீது புகார்கள் எழுந்து வந்தன. 

இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு அயர்லாந்து நாட்டின் தரவு பாதுகாப்பு விதிகளை மீறியதாக அந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. 

இதனைத் தொடர்ந்து பயனர்களின் தரவுகளை ஐரோப்பிய நிறுவனங்களுக்கு பகிர்ந்த குற்றத்திற்காக வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.1949 கோடி அபராதம் விதித்து அயர்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் பயனர்களின் தரவு பாதுகாப்பை உறுதி செய்யவும் அந்நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் வாட்ஸ்ஆப் நிறுவனம் அரசின் அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.