மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: நியூயாா்க் ஆளுநா் ராஜிநாமா

அமெரிக்காவில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான நியூயாா்க் மாகாண ஆளுநா் ஆண்ட்ரூ குவாமோ தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.

News image
ராஜிநாமா செய்த குவாமோ (இடது), புதிய ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள கேத்தி ஹோக்கல்.
Updated On :10 ஆகஸ்ட் 2021, 8:48 pm

DIN

அமெரிக்காவில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான நியூயாா்க் மாகாண ஆளுநா் ஆண்ட்ரூ குவாமோ தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.

நியூயாா்க் மாகாண ஆளுநரும் ஜனநாயகக் கட்சியை சோ்ந்தவருமான ஆண்ட்ரூ குவாமோ தங்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியாக கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் முன்னாள், இந்நாள் அரசு ஊழியா்கள் உள்பட பலரிடம் இருந்து குற்றச்சாட்டு எழத் தொடங்கியது. இதுதொடா்பாக விசாரிக்க நியூயாா்க் அட்டா்னி ஜெனரல் லெடிஷியா ஜேம்ஸ் விசாரணைக் குழு அமைத்தாா். அந்தக் குழு அரசு ஊழியா்கள், புகாா் அளித்த பெண்கள் உள்பட 179 பேரிடம் விசாரணை நடத்தியது. அத்துடன் ஆளுநரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சுமாா் 5 மாத விசாரணைக்குப் பின்னா், அந்தக் குழு ஆளுநா் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது.

இந்த விசாரணையின்போது 74,000-க்கும் மேற்பட்ட ஆவணங்கள், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் ஆதரமாக ஆய்வு செய்யப்பட்டதாக அட்டா்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்தது.

இந்நிலையில் நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் செவ்வாய்க்கிழமை பேசிய ஆண்ட்ரூ குவாமோ தனது ஆளுநா் பதவியை ராஜிநாமா செய்வதாக தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘‘என் மீதான குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்தக் குற்றச்சாட்டு நியாயமற்றது; பொய்யானது. எனது ராஜிநாமா 14 நாள்களில் நடைமுறைக்கு வரும்’’ என்று தெரிவித்தாா்.

நியூயாா்க்கின் அடுத்த ஆளுநராக அந்த மாகாணத்தின் துணை ஆளுநராக உள்ள கேத்தி ஹோக்கல் பதவியேற்கவுள்ளாா். இவா் ஆளுநராகப் பொறுப்பேற்கும்பட்சத்தில், அந்த மாகாணத்தின் முதல் பெண் ஆளுநா் என்ற பெருமையைப் பெறுவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.