அகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

‘ஏமன் நாட்டில் 1.6 கோடி பேர் பட்டினியில் உள்ளனர்’: ஐநா கவலை

ஏமன் நாட்டில் நிலவி வரும் பஞ்சத்தின் காரணமாக 1.6 கோடி மக்கள் பட்டினியில் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அவையின் உணவு கவுன்சில் கவலை தெரிவித்துள்ளது.

News image

‘ஏமன் நாட்டில் 1.6 கோடி பேர் பட்டினியில் உள்ளனர்’: ஐநா கவலை

Updated On :23 செப்டம்பர் 2021, 7:26 pm IST

ஏமன் நாட்டில் நிலவி வரும் பஞ்சத்தின் காரணமாக 1.6 கோடி மக்கள் பட்டினியில் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அவையின் உணவு கவுன்சில் கவலை தெரிவித்துள்ளது.

ஏமன் குடியரசு, மேற்கு ஆசியாவில், அரேபிய தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ளது.

உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டில் கடந்த சில வருடங்களாக நிலவி வரும் பஞ்சம் தற்போது உச்சம் தொட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் உணவு திட்டத்தின் கீழ் அண்டை நாடுகளின் உதவியால் அந்நாட்டிற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது உணவுதிட்டத்திற்கு போதிய நிதி இல்லாததால் அக்டோபர் மாதம் மக்களுக்கு வழங்கப்படும் உணவிற்கான நிதி குறைக்கப்பட உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

மார்ச் 1 அன்று ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து இணைந்து நடத்திய ஒரு மெய்நிகர் உறுதிமொழி மாநாட்டில், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் இந்த ஆண்டு ஏமனுக்கு 3.85 பில்லியன் டாலர்கள் நிதி தேவைப்படுவதாக வேண்டுகோள் விடுத்திருந்தார். 

எனினும் 1.7 பில்லியன் டாலர்கள் மட்டுமே நிதியாக கிடைக்கும் என உறுதியானதால் ஏமன் நாட்டிற்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏமன் நாட்டில் நிலவி வரும் வறுமையின் காரணமாக 1.6 கோடி மக்கள் பட்டினியை சந்தித்து வருவதாகவும், அவற்றைக் களைய உலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் எனவும் ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.