திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மேலும் உயர்வு! 

பாகிஸ்தான் நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்து, 233.91 ரூபாயாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :16 ஆகஸ்ட் 2022, 4:05 pm IST

பாகிஸ்தான் நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்து, 233.91 ரூபாயாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த புதிய விலை ஆக்ஸ்ட் 16 நள்ளிரவு முதல் அடுத்த 14 நாட்கள் வரைக்கும் அமலில் இருக்குமென தகவல் வெளியாகியுள்ளது. 

பெட்ரோல் லிட்டருக்கு 233.91 ரூபாய், டீசல் 244.44 ரூபாய், மண்னெண்ணய் 199.40 ரூபாயாகவும் புதியதாக விலை ஏற்றப்பட்டுள்ளது. 

சர்வதேச அளவில் பெட்ரோல் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம், அந்நிய செலாவணி மாற்று விகிதத்தில் ஏற்பட்ட சரிவு போன்ற காரணிகளால் பெட்ரோலின் விலையை உயர்த்தியுள்ளோம் என பாகிஸ்தான் நாட்டின் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இதில் மானியம் அளித்து இனிமேலும் அரசாங்கம் இழப்புகளை சந்திக்க தயாராக இல்லையெனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாபாஸ் ஷெரிஃப் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஆனதிலிருந்து மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலையேற்றம் அதிகரித்துக்கொண்டே வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.