மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆகப் பதிவு!

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

News image

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆகப் பதிவு!

Updated On :6 டிசம்பர் 2022, 9:59 am

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக புவியியல் ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

ஜாவா மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் பிற்பகல் 1.07 மணிக்கு, ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவானது. 

ஜெம்பர் ரீஜென்சிக்கு தென்மேற்கு 284 கி.மீ தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கமானது மையம் கொண்டுள்ளது. 

இருப்பினும் சுனாமிக்கான எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. 

இந்தோனேசியாவில் கடந்த நவ.21-ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.