திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பெண்களைப் படிக்கவிடு! தேர்வைப் புறக்கணித்த ஆப்கன் மாணவர்கள்! தலிபான்களுக்கு எதிர்ப்பு!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கத் தடைவிதித்த தலிபான் ஆட்சியின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் மாணவர்கள் பல்கலைக் கழக தேர்வுகளைப் புறக்கணித்தனர்.

News image
தேர்வைப் புறக்கணித்து வெளியேறும் ஆப்கன் மாணவர்கள்!
Updated On :22 டிசம்பர் 2022, 1:02 pm

DIN

ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கத் தடைவிதித்த தலிபான் ஆட்சியின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் மாணவர்கள் பல்கலைக் கழக தேர்வுகளைப் புறக்கணித்தனர்.

பெண்களைப் படிக்க அனுமதிக்க வலியுறுத்தி தேர்வறையிலிருந்து ஆண் மாணவர்கள் வெளிநடப்பு செய்தனர். சில பேராசிரியர்களும் பெண்கள் படிக்கத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் பணிகளை ராஜிநாமா செய்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து, தற்போது தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில், தற்போது பெண்கள் கல்லூரி பயில ஆப்கன் அரசு தடை விதித்துள்ளது. ஆப்கன் பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல தலிபான் ஆட்சியாளா்கள் விதித்த தடையை பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை (இன்று) அமலுக்கு கொண்டுவந்தனர். 

இந்நிலையில், இன்று பல்கலைக் கழக தேர்வுகளை ஆண் மாணவர்கள் புறக்கணித்து தேர்வறையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பெண்களை தலிபான்கள் படிக்க அனுமதிக்க வலியுறுத்தி அனைத்து மாணவர்களும் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறினர். 

இதேபோன்று பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் சிலரும், பெண்கள் படிக்கக்கூடாது என்ற தலிபான் ஆட்சியாளர்களின் உத்தரவுக்கு எதிராக தங்கள் பணிகளை ராஜிநாமா செய்தனர். 

பல்கலைக் கழக தேர்வறை வாயிலில் அனுமதி மறுக்கப்பட்டு திரண்டிருந்த மாணவிகளுக்கு ஆதரவாக, ஆண் மாணவர்கள் தேர்வறையிலிருந்து வரிசையாக வெளியேறினர். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக் வெளியேறிய பிறகு அந்த நாட்டு ஆட்சியைக் கடந்த ஆண்டு கைப்பற்றிய தலிபான்கள், தங்களது முந்தைய ஆட்சியைப் போலின்றி அனைவருக்கும் உரிய உரிமைகள் அளிக்கப்படும் என்று வாக்களித்தனா். அதனை மீறி அவா்கள் பெண்களின் உயா் கல்விக்கு தடை விதித்துள்ளதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.